7. கணினியின் தலைமுறைகள்

ஆரம்பத்தில் உருவாகியிருந்த கணினிகள் மிகக் குறைந்த பயனைத் தருவதாகவே இருந்தது. மேலும் இதன் அளவு ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவை ஒத்திருந்தது.

இததற்கு பிறகு அடுத்தடுத்த கட்ட வளர்சிகளின் போது கணினிகளின் செயல்திறன் மற்றும் அதன் வேகமும் அதிகரித்தது. மேலும் அதன் உருவ அளவும் படிபடியாக குறைவடைந்து சென்றது. இம்முறையில் நிகழ்ந்த மாற்றங்களை கணினியின் தலைமுறைகள் (Computer Generation) என அழைத்தனர். மேலும் கணினியின் தலைமுறைகள் ஐந்தாக பிரிக்கப்பட்டன.


முதலாவது தலைமுறை

கி.பி 1946 - 1959 வரையிலான காலபகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினிகள் முதல் தலைமுறையைச் (First Generation) சேர்ந்ததாகும்.

இக்கலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட கணினிகளில் வெற்றிடக்க் குழாய்கள் (Vacuum Tube) எனும் தொழிநுற்ற்பம் பயன்படுத்தப்பட்டன. இது அமைப்பில் மிகப் பெரியதாகவும் அதிக திறனுடைய மின்சாரமும் இததற்கு தேவைப்பட்டது. மேலும் இது அதிக இரைச்சலையும் உருவாகியது. இவ்வகையான கணினிகளை இயக்குவுதற்ற்கு மிகப் பெரிய குளிரூட்டிகள் (Air Conditioners) தேவைப்பட்டது. 

எனியாக் (ENIAC - Electronic Numerical Indicator Analyzer Computer) என்பதே உலகின் முதலாவது முழுமையான மின்னுலவியல் கணினியாக (Electronic Computer) கருதப்பட்டது. இது 30 டன் எடையும் 100 அடி நீளமும் 8 அடி உயரமுமாகக் காணப்பட்டது. இதில் 17468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tube) பயன்படுத்தப்பட்டன. இவற்றை புரிந்து கொள்ள மிகக் கடினமான இயந்திர மொழியிலேயே (Machine Level Language) இயக்க முடியும்


வெற்றிடக்க் குழாய் (Vacuum Tube)


எனியாக் (ENIAC)
 

இரண்டாவது தலைமுறை 

கி. பி. 1959 -1964  வரையிலான காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய கணினிகள் இரண்டாம் தலைமுறையைச் (Second Generation) சேர்ந்ததாகும். இக்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட கணினிகளுக்கு திரிதடையம் (Transistor) பயன்படுத்தப்பட்டது.

திரிதடையம் (Transistor) ஆனது வெற்றிடக்க் குலைகளைகளிளிருந்து (Vacuum Tube) முற்றிலும் மாறுபட்ட தொழினுற்ற்பத்தைக் கொண்டிருந்தது. இது அளவவில் சிறியதாகவும், வேகமாகவும் (Faster), நம்பகமானதாகவும் (Reliable), குறைந்த விலைகளிலும் தயாரிக்கக் கூடியதகமும் இருந்தது. 

இதனை ஜோன் பார்டீன் (Jhon Bardeen), வில்லியம் சொக்கலே (William Shockley), வால்ட்டர் பிரட்டின் (Walter Brattain) என்பவர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்தக் கணினிகளில் இயந்திர மொழி (Machine Level Language) மட்டுமன்றி  assembly language உம் பயன்படுத்தப்பட்டன.

 திரிதடையம் (Transistor)

 ஜோன் பார்டீன் (Jhon Bardeen)

வில்லியம் சொக்கலே (William Shockley)

 வால்ட்டர் பிரட்டின் (Walter Brattain)

 மூன்றாவது தலைமுறை

 கி. பி. 1965 - 1971  வரையிலான காலப்பகுதிகளில் அறிமுகப்படுத்திய கணினிகள் மூன்றாம் தலைமுறையைச் (Third Generation) சேர்ந்ததாகும். இக்காலத்தில் அறிமுகப்படுத்திய கணினிகளில் ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) எனும் தொழில் நுட்ட்பம் பயன்படுத்தப்பட்டது. 

இக்கணினிகளில் மிக அதிகமான திரிதடயதிற்ற்கு (Transistor) பதிலாக ஒரு ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) பயன்படுத்தப்பட்டது. இதனால் கணினியின் அளவு சிரியதாக்கப்பட்டதுடன் மின்சார பாவனையளவும் குறைக்கப்பட்டது.

ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) ஆனது செயல் திறன் அதிகமானதாகும். இன்றைய இலத்திரனியல் சாதனங்களில் ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதனை ராபர்ட் நய்ஸ் (Robert Noyce) உம் ஜாக் கில்பி (Jack Kilby) உம் இணைந்து கண்ண்டுபிடிதிருன்தனர். மேலும் இந்த தலை முறைகளில்தான் High  Level  Language என்ற நவீன பயன்பாட்டு மொழி அறிமுகம் சைய்யப்பட்டது.

ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit)

 ராபர்ட் நய்ஸ் (Robert Noyce)

ஜாக் கில்பி (Jack Kilby)

 நான்காம் தலைமுறை

கி. பி. 1971  முதல் தற்போது வரை உள்ள கணினிகள் அனைத்தும் நான்காம் தலைமுறையைச் (Fourth Generation) சேர்ந்ததாகும்.  இதில் நுண்செயலி (Microprocessor) எனப்படும் தொழினுற்ற்பம் பயன்படுத்தப்படுகின்றது.  

இன்டெல் (Intel) நிறுவனத்தில் பணி புரிந்த டேட் ஹோப்ப் (Ted Hoff) என்பவர்தான் இதனைக் கன்னுடுபிடித்தார். இது ஒருங்கிணைச் சுற்றை (Integrated Circuit) விட மிக அதீத திறன் கொண்டதாக  நுண்செயலி (Microprocessor) விளங்குகின்றது. 

 நுண்செயலி (Microprocessor)


டேட் ஹோப்ப் (Ted Hoff)

 ஐந்தாம் தலைமுறை

 ஐந்தாம் தலைமுறை (Fifth Generation) என்பது இன்னும் சந்தைப் படுத்தாத புதிய தொழினுற்ற்ப முறையிலான கணினிகளைக்க் குறிக்கின்றது. இது இன்றைய அதி நவீன கணினிகளைக் காட்டிலும் இவை சிறந்தவையாக காணப்படும். எப்படிஎன்றால் இவற்ற்றால் சுயமாக சிந்திக்க முடியும். இவற்றிக்கு Keyboard, Mouse, போன்ற பாகங்கள் அவசியமில்லை. இவற்றின் Monitor தொடு தன்மை (Touch Screen) உடையன.  இவ்வகையான கணினிகளை Surface Computer என அழைக்கப்படும்.

Surface Computer

6. Ada Lovelace (1815-1852)

 லேடி அட லோவேலசே ( Lady Ada Lovelace)  என்ற பெண்தான் உலகின் முதலாவது கணினி செயல்நிரலாளர் (Computer Programmer) ஆவார். இவர் சார்லஸ் பாபேஜின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

லேடி அட லோவேலசே ( Lady Ada Lovelace)

 


5. சார்ல்ஸ் பாபேஜ் 1837

கணினியின் தந்தை என கருதப்படும்  சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage, 1791 - 1871) பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.

1837யில்  முதல் முழுமையான செய்நிரல் கணினியை (Programmable Mechanical Computer) சார்ல்ஸ் பாபேஜ் வடிவமைத்தார். ஆனால் அக்கால தொழில்நுட்ப எல்லை, நிதி பற்றாக்குறை, மற்றும் தன்னுடைய வடிவமைப்புடன் தனகுதலை நிறுத்தமுடியாமை (ஆயிரக்கணக்கான கணினி சம்பந்தப்பட்ட பொறியியல் செயற்திட்டங்களின் முடிபுக்கு காரணமாக பண்பு) போன்ற காரணங்களின் கலப்பால் இந்த சாதனத்தை அவரால் முழுமையாக உருவாக்க முடியவில்லை.

இவரது இயந்திரத்தில் துளையிடப்பட்ட அட்டைகள் (Punch Card) பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக இரண்டையும் மூன்றையும் கூட்ட வேண்டும் எனில் இரண்டு துளையிடப்பட்ட அட்டையையும், மூன்று துளையிடப்பட்ட அட்டையையும் இவியந்திரதினுள் நுழைத்தால் ஐந்து துளையிடப்பட்ட அட்டையை விடையாகப் பெற்றனர்.

சார்ல்ஸ் பாபேஜ் (Charles Babbage)

 செய்நிரல் கணினி (Programmable Mechanical Computer)

4. கணினியின் வளர்ச்சி 1674

கணினியின் வளர்ச்சியில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களில் கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz 1646 - 1716) உம் ஒருவராவர். இவர் ஒரு ஜெர்மெனிய மெய்யியலாளர் ஆவார்.  நியுடனுக்கு புறம்பாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.  இவர் வடிவமைத்த Stepped Rockorner எனப்படும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

 கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் (Gottfried Wilhelm Leibniz)


 Stepped Rockorner

3. கணினியின் வளர்ச்சி 1963

கணினியின் வளர்ச்சியில் குறிபிடத்தக்க விடயங்களில் 1623யில் வில்ஹெம் சிக்கர்ட்  (Wilhem Schickard) என்பவர் வடிவமைத்த Calculating Clock  எனப்படும் சாதனத்தை குறிப்பிடலாம்.   

Calculating Clock

வில்ஹெம் சிக்கர்ட்  (Wilhem Schickard)



2. ஆரம்பத்தில்

கணினி என்பது சிக்கலான கணிப்பு, தகவல் சேமிப்பு சாதனமாக இனம் காணப்பட்டது. அதாவது கணிதளுக்கான ஒரு கருவியாகவே கணினி ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கணிதம் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். இதனால்தான் கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார்.

எண்களுக்குரிய எழுத்து வடிவம் அறியப்படாமல் இருந்தபோது எவ்வாறு எண்கணித மதிப்பீடுகளை கணித்திருக்கமுடியும் என்பது தற்போது சிந்திப்பதற்கு சிறிது கடினமான விடயம். ஆனால் இப்படியான வசதிகள் மற்றும் எழுத்து வடிவம் என்பன இல்லாதபோது மனிதன் தனது கை விரல்களை உபயோகித்து எண்களை இனம் கண்டான். விரல்களின் எண்ணிக்கையை விட கூடுதலான பொருட்கள் தென்பட்டபோது கற்கள், மணிகள், உலோகங்கள் என்பவற்றின் உதவியை நாடினான். பெரும்பாலும் ஒப்பீட்டு முறையிலேயே அவன் எண்களை தரம்பிரித்தான். இதன் தொடர்ச்சியாகத்தான் இவ்வாறான மதிப்பீடுகள் செய்வதற்கு ஒரு கருவியின் அவசியம் அவனுக்குத் தேவைப்பட்டது. அவ்வாறான காலத்தில் தோன்றியதுதான் அபக்கஸ் (Abacus) எனப்படும் எண்கணிதக் கருவியாகும்.

அன்றைய அபக்கஸ் (Abacus) கருவிதான் இன்றைய கணினியின் முன்னோடி என சொல்ல முடியும். ஆரம்ப காலத்தில் கணினியை உருவாக வேண்டும் என்று யாரும் ஆராய்சிகள் செய்யவில்லை. மாறாக அவர்கள் நல்ல ஒரு கணக்கிடும் கருவியை உருவாக்க எண்ணினார்கள். அதன் முயற்சியின் காரணமாக கணினியின் பரிணாமம் வளர்ச்சி கண்டது.

அபக்கஸ் (Abacus)

1. அறிமுகம்

இன்றைய நவீன உலகை ஆக்கிரமித்துள்ள மிகப் பெரிய இயந்திரங்களில் கணினியானது முதலிடத்தில் உள்ளது. உலகின் சகல தொழில் துறைகளிலும் கணினியின் ஆதிக்கமே அதிகமாகக் காணபடுகின்றது. இதன் காரணமாகவே கணினி அறிவானது அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

ஆனால் இப்போதும் எம்மில் பலருக்கு கணினி அறிவானது மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இததற்கு காரணம் பொருளாதாரம், ஆங்கில மொழியறிவு இல்லாமை, தொழிநுட்ப வளர்ச்சியின் அறிவின்மை என்பன முக்கியமாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே இன்றைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய கணினி கல்வியை இவ்விணையத் தளத்தில் இலவசமாகவும் இலகுவாக புரிந்து கொள்ளகூடிய வகையிலும் தமிழில் படிக்க கூடிய வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

கற்று பயன் பெருக.